Tourist Places in Karur District - கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்கள்
கரூர் மாவட்டத்தில் மிகப்பிரபலமான சுற்றுலாத் தலங்கள் இல்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும், உள்ளூர் பொழுதுபோக்கு இடமாகவும் சில இடங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்! கரூர் பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை கொண்டுள்ளது. இது போர்களமாக விளங்கியதால் பல்வேறு மன்னர்களின் வீரத்தை பறைசாற்றும் சிலைகளை காணமுடிகிறது.கல்யாண பசுபதீஸ்வரர், கரூர் மாரியம்மன் கோயில், வெண்னை மலை பாலதண்டாயுதபாணி கோயில், இலாலாப்பேட்டை ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ மதுரைவீரன் கோவில், ஆத்தூர் சோழியம்மன் கோயில், மகாதானபுரம் மகாலக்ஷ்மி அம்மன் கோயில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லேஸ்வரர் கோயில், குழித்தலை கடம்பர் கோயில், ஐயர் மலை சிவன் கோயில், லால்பேட் ஐயப்பன் கோயில், தோகைமலை முருகன் கோயில், வியாக்கரபுரீஸ்வரர் கோயில், புகழிமலை அறுபடை முருகன் கோயில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில், மண்மங்களம் புது காளியம்மன் கோயில் மற்றும் பல கோயில்கள் இங்கு சிறந்த வழிபாட்டு தலங்களாக உள்ளன.
FAQ : What is Famous in Karur District?
1. கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோவில்
எண்ணற்ற பழங்கால கோவில்களுக்கு கரூர் பெயபெற்றது. இப்பட்டணம் ஏழு புனித சிவாலயங்களுள் ஒன்று. ஐந்தி அடி உயர லிங்கம் உடைய பசுபதீஸ்வரலிங்கம் கோவில் மிகவும் புகழ்பெற்றது. கரூர் நகரம் சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாகவும் புகழ் பெற்ற தொழில் மையமாகவும் விளங்கியது. குடிசைத் தொழில்களுக்கும் கைத்தறி நெசவுத் துணிகளுக்கும் புகழ்பெற்ற நகரமாக திகழும் இந்த நகரத்திற்கு பசுபதீஸ்வரர் கோயில் அடையாளச் சின்னமாக திகழ்கிறது. பசுபதீஸ்வரர் லிங்கம், பால் சுரக்கும் பசு மற்றும் இது போன்ற பல்வேறு சிற்பங்கள் இந்த கோவிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. கரூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
2. கல்யாண வெங்கடரமண சாமி திருக்கோவில்
'தென் திருப்பதி' என்று அழைக்கப்படும் தாந்தோணி கல்யாண வெங்கடரமண சாமி திருக்கோவில் தாந்தோணிமலை 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள தான்தோன்றிமலையின் சிறுகுன்றில் அருள்மிகு கல்யாண வேங்கடரமணர் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் கரூா் மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் தென் திருப்பதி என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறது.
3. பொன்னணியாரு அணை
கரூர் மாவட்டத்தில் கடவூர் மலைப்பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தின் அருகில் அமைந்துள்ள பொன்னணியார் அணைக்கட்டு சுற்றுலா தலமாகும். இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைப் பகுதி பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது.
4. அருள்மிகு மாரியம்மன் கோயில்
கரூர் மாவட்ட நகரப் பகுதியின் மைய்யத்தில் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும் இங்கு அருள் மிகு மாரியம்மன் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வைகாசி திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிறது, இதில் சாதி சமய வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் பங்கேற்பதுடன், வழிபாட்டிற்காக ஒவ்வொரு பக்தா்களும் அமராவதி ஆற்றிலிருந்து புனித நீரை எடுத்து வந்து இந்த மகத்தான நிகழ்வில் பங்கேற்கின்றனா்.
5. வெண்ணெய்மலை முருகன் கோவில்
கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள வெண்ணெய்மலை கோயிலில் அருள்மிகு பாலசுப்பிரமணியர் எழுந்தருளியுள்ளார். இக்கோயில் கரூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் சேலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இறை நேசர்களாகிய அருணகிரிநாதர் மற்றும் அவ்வையார் இக்கோயிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை போற்றி பாசுரங்கள் பல பாடியுள்ளனர்.
6. புகழிமலை முருகன் திருக்கோயில்
புகழிமலை கோயில் புகழூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் 17 கி.மீ, தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறிய மலையின் மீது சுவாமி சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். இங்கு அமைந்துள்ள சமணர்படுக்கை மற்றும் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். கரூர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
7. அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
57 கி.மீ தொலதைவில், கரூர் மாவட்டத்தில் குளித்தலையிலிருந்து 8 கி.மீ தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோட்சவம் திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது மற்றும் சித்திரை திருவிழா, தைப்பூசத் திருவிழா, கார்த்திகை திருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா ஆகியவை பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. மேலும், குளித்தலை தாலுகாவின் மையப்பகுதியில் அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோயில், 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது
8. ஆத்துப்பாளையம் அணை
1980-ல் தொடங்கி 1992 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அணை நொய்யல் ஆத்துப்பாளையம் அணை. 19,500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதிக்காக உருவாக்கப்பட்டது இந்த அணை. 5 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகள் கலந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. 2019-ல் பெய்த மழையால் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணை நிரம்பியது.
10. நெரூர் சதாசிவப் பிரம்மேந்திராள் அதிஷ்டானம்
கரூர் மாவட்டத்தில், கரூர் – திருமுக்கூடலூர் சாலையில் 13-வது கிலோ மீட்டர் தொலைவில் நெரூர் கிராமத்தில் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் ஜீவ சமாதியும், அதற்கு முன்புறம் அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது. இந்த ஜீவ சமாதி காவிரிக் கரையில் ஒரு சோலையில் அமைந்துள்ளது. காவிரியாறு இவ்விடத்தில் தெற்கு நோக்கி ஓடுவது மிகச் சிறப்பான அம்சமாகும். தமிழகத்திலிருந்து மட்டுமன்றி பிற மாநிலத்தவரும் வருகை தரும் ஒரு அற்புத தலமாகும்.
11. கரூர் அரசு அருங்காட்சியகம்
2000 ஆம் ஆண்டு கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் அரசாங்க அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. பல்வேறு விதமான வெண்கல பொருட்கள், உலோக பாத்திரங்கள், பழங்கால இசைக்கருவிகள் ஆகியவற்றை இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகின்றது. நாணயங்கள், பாறைகள், புதைப்படிவங்கள், தாவர மாதிரிகள், சிப்பிக்கள் மற்றும் கடல்வாழ் உயிரணங்கள் ஆகியவையும் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அருங்காட்சியகம் தொடர்ச்சியாக சொற்பொழிவுகளும், பயிற்சி வகுப்புகளும் நடத்துகின்றது.