இரவில் சில சமயங்களில் திடீரென்று யாரோ என்னை அமுக்குவதாய் உணர்கிறேன். அப்பொழுது எழ முடியவில்லை, கத்த முடியவில்லை. என்னுடைய சில தோழிகளும் இதை உணர்ந்திருக்கிறார்கள். இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?
இது நம் தூக்கம் சம்பந்தப்பட்ட நிகழ்வுதான்.
நாம் உறங்க ஆரம்பித்த பிறகு இரண்டு விதமான உறக்க நிலைகளை அடைவோம். ஒன்று துரித கண் அசைவு (Rapid Eye Movement - REM) நிலை. மற்றொன்று அப்படி இல்லாத நிலை. உறங்க ஆரம்பிக்கும் போது இந்த இரண்டாவது நிலையுள் நாம் மூச்சு விடுவது மூன்று படிகளின் குறைந்து ஒரு சீரான நிலையை அடையும். அதன் பின் REM நிலையில் ஆழ்ந்து உறங்குவோம். இந்நிலையில் தான் நாம் கனவுகள் காண்போம்.
ஆழ்ந்த உறக்க நிலை சமயத்தில் நம் உடல் பாகங்கள் அசையாத நிலையை அடைய மூளை க்ளைசின் (Glycine) என்ற ரசாயனத்தை (neurotransmitter) அனுப்பி நாம் கைகால்களை அசைத்து உறக்கத்தில் கனவுகள் சமயத்தில் மற்றவர்கள் மீது பிரயோகிக்கா வண்ணம் செயல் இல்லாமல் செய்யும். அச்சமயம் மூச்சு விடுவது போன்ற சில குறைவான சதைகள் இயங்கும் ஶ்ரீ
இந்த REM நிலையில் திடீரென ஒருவர் உறக்கம் தடைபடலாம். அப்போது கைகால் போன்றவை உடனே இயங்காது. அதனால் செயலற்று இருப்பது ஒரு காரணம். இரண்டாவது சீராக இயங்கும் நுறையீரல் உதரவிதானம் போன்றவை துரித நிலையில் இயங்காமல் மூச்சு அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
இதற்கு ஆங்கிலத்தில் Sleep Paralysis (தூக்க பக்கவாதம்) என்பர்.
(நன்றி : கூகுள்)
(நன்றி தமிழ் கோரா)