இர்ஃபான் பதான் (Irfan Pathan)
இந்திய அணியின் முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' இர்ஃபான்பதான். இவருக்கு வயது 35. 2003-இல் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.
இவர் 29 டெஸ்ட், ( 100விக்கெட்டுகள், 1,105 ரன்கள்) 120 ஒரு நாள் (173 விக்கெட்டுகள், 1,544 ரன்கள்), 24 சர்வதேச 'டி-20 (28 விக்கெட்டுகள், 172 ரன்கள்) போட்டிகளில் விளையாடினார். 2007-இல் 'டி-20' உலகக் கோப்பை, 2013-இல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்ற இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.
ஐசிசி விருது
இவரை இந்திய ஜாம்பவான் கபில்தேவுடன் விமர்சகர்கள் ஒப்பிட்டனர்.
ஆட்ட நாயகன் விருது
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 'டி-20' உலகக் கோப்பை ஃபைனலில், 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்ட இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
அதன்பின், 'ஃபார்ம்' இன்றித் தவித்த இர்ஃபான் பதான், தேசிய அணியில் வருவதும், போவதுமாக இருந்தார். இந்நிலையில், 2011-12 ரஞ்சிக் கோப்பை சீசனில், பரோடா அணிக்காகப் பங்கேற்ற இவர், 21 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம், மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வானார்.
கடைசியாக, இவர் 2012-இல் ஒரு நாள் (எதிர்: இலங்கை), 'டி-20' (எதிர்: தென் ஆப்பிரிக்கா) போட்டிகளில் பங்கேற்றார்.
இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்தபோதும் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை.
IPL-போட்டிகளில் இர்ஃபான்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் பஞ்சாப் (2008-10), டில்லி (2011-2013),ஹைதராபாத் (2014), சென்னை (2015), புனே (2016), குஜராத் (2017) அணிகளுக்காகப் பங்கேற்றார்.
இய்வு பெற்ற இர்ஃபான் பதான்
இர்ஃபான் பதான், கடந்த ஜனவரி 4-இல் சர்வநேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்